குறள்மலையில் தேர்த்திருவிழா..
திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம் செய்து காட்டியபோது.
திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தேர்ச்சக்கரங்களை ( Stainless steel with hydraulic brakes ) திரு.மனோகர் அண்ணன் அவர்கள் செயல் விளக்கம் செய்து காட்டியபோது.
திருவள்ளுவர் தினத்தில் 15.01.2017, செயங்கொண்டத்தில், முப்பெரும் விழாவில்…
தமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி அவர்கள் வெளியிட்டு வரும் மாத இதழில் திருக்குறள் கல்வெட்டுகள் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். குறள்மலைச் சங்கம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.
ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித் தலைமையாசிரியருடன்…உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.
ஜெயங்கொண்ட சோழபுரத்தில் திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம் முடிந்த பின் பேராசிரியர் பூவை.சு.செயராமன் அவர்களுடன்… அருகில் மேனாள் தேனி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்.
மூன்று நூல்கள்… தீயசக்திகளால் சூறையாடப்பட்டு, தற்போது புணரமைக்கப்பட்டுவரும், யாழ்ப்பாண நூலகத்தில் வைப்பதற்காக, கல்வெட்டில் திருக்குறள் பாகம்1,பாகம்2,பாகம்3 ஆகிய மூன்று நூல்களையும் திரு அறிவுடைநம்பி அவர்கள் வசம் இன்று ( 25.11.2016 ) ஒப்படைத்தபோது எடுத்த படம்..
முதல் திருக்குறள் கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு, திறப்புவிழா நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் 9 குறள்களை பதிக்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் உமது ஆதரவுகளை பெளதீக சக்தியாக எமக்கு வழங்கி, விரைவில் குறளின் முதல் அதிகாரத்திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்கள் என்று… Read more »
பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்த தொல்லியல்துறையினரின் ஆய்வறிக்கை, இன்று ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, குறள்மலை உருவாக்கம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்…