யுனெஸ்கோ இயக்குநர் பங்கேற்றுச் சிறப்பிக்கும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வரும் ஜனவரி மாதம் கோயமுத்தூரில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடைபெறும்.
மாநாட்டின் நோக்கம் :
1) திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்குவது.,
2) யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டுவது.,
3) ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச் செய்யவது.