வணக்கம்.
பேரன்புடையீர்!
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக தற்போது முதல் குறள் மலை மீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து, 2016 ஜூலை 3 ஆம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது. குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.ஜி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம் தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விழா நடைபெறும் இடம்: குறள் மலை 9 ( மலையப்பாளையம் மலை ) ஈரோடு மாவட்டம்.





